Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் விமரிசை

வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் விமரிசை

வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் விமரிசை

வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் விமரிசை

ADDED : ஜூலை 14, 2024 12:10 AM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காந்தி சாலையில், மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டிற்கான ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 7ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இரண்டாம் நாள் உற்சவமான ஜூலை 8ம் தேதி காலை சூரிய பிரபையும், இரவு சந்திர பிரபை உற்சவமும் நடந்தது. மூன்றாம் நாளான ஜூலை 9ம் தேதி, காலை பூத வாகனமும், இரவு ராவணேஸ்வர வாகன உற்சவமும் நடந்தது.

நான்காம் நாள் உற்சவமான 10ம் தேதி காலை நாக வாகனமும், இரவு ரிஷப வாகன உற்சவமும் நடந்தது. ஐந்தாம் நாள் உற்சவமான 11ம் தேதி காலை அதிகார நந்தி வாகனமும், இரவு திருக்கல்யாண உற்சவமும் விமரிசையாக நடந்தது. ஆறாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு யானை வாகன உற்சவம் நடந்தது.

ஏழாம் நாள் உற்சவமான நேற்று, காலை 9:00 மணிக்கு மருகுவார்குழலி அம்பிகையுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வர் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். நேற்று இரவு யானை வாகன உற்சவம் நடந்தது.

நாளை காலை திருப்பல்லக்கு புறப்பாடும், இரவு கற்பக விருஷம் காமதேனு உற்சவமும் நடைபெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us