/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நிறைவு மாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நிறைவு
மாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நிறைவு
மாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நிறைவு
மாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நிறைவு
ADDED : ஜூலை 22, 2024 11:39 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி வடக்கு மாட வீதியில், மாகாளியம்மனுக்கும், கன்னியம்மனுக்கும் ஆடி மாத கூழ்வார்த்தல் விழா, கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது.
தொடர்ந்து மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 19ம் தேதி மாலை 5:00 மணிக்கு சின்ன வேப்பங்குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டும் நிகழ்வு நடந்தது.
நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு மாகாளியம்மன், கன்னியம்மன் வீதியுலா நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டு அம்மனுக்கு படையலிடப்பட்டது. இரவு 8:00 மணிக்கு அம்மன் வர்ணிப்பும், கும்பம் படையலும் நடந்தது.
இரவு 9:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மாகாளியம்மன் வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து அம்மனை வழிபட்டனர்.