ADDED : ஜூலை 09, 2024 03:53 AM
ஸ்ரீபெரும்புதுார், : ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமன்குமார், 24. சுங்குவார்சத்திரத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, 'டியோ ஸ்கூட்டரில்' பிள்ளைசத்திரத்தில் உள்ள அவரது நண்பர் அறைக்கு சென்று, மீண்டும் சுங்குவார்சத்திரம் வந்த போது, சென்னை - - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சந்தவேலுார் அருகே வந்தபோது, ஸ்கூட்டர், சாலையின் நடுவே இருந்த மீடியனில் மோதியது.
இதில், அமன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.