Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உயிர்பலி வாங்க காத்திருக்கும் மழைநீர் வடிகால்வாய்

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மழைநீர் வடிகால்வாய்

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மழைநீர் வடிகால்வாய்

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மழைநீர் வடிகால்வாய்

ADDED : ஜூன் 13, 2024 05:05 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் மேலாண்டைகரை, தாமரை பள்ளம் தெருவில் சாலையோரம் கான்கிரீட் தளத்துடன் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. சாலையின் தரைமட்டத்தில் உள்ள இக்கால்வாய் தளம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, திறந்து கிடக்கும் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, தாமரைபள்ளம் தெருவில், விபத்தை தவிர்க்கும் வகையில், தளம் சேதமடைந்து திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய் மீது சிமென்ட் சிலாப் போட்டு மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us