/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை
காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை
காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை
காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை
ADDED : மார் 11, 2025 10:52 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் முக்கிய ரவுடியாக வலம் வந்த வசூல்ராஜா, நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த கொலை வெறி தாக்குதலால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
காஞ்சிபுரம், மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் வசூல்ராஜா என்ற ராஜா, 38; 'ஏபிளஸ்' ரவுடி. இவர் மீது, கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், அடிதடி என, காஞ்சிபுரம் நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கத்தியால் வெட்டு
இந்நிலையில், திருக்காலிமேடு ரேஷன் கடை அருகே, நேற்று மதியம் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். மதுபாட்டில்கள் வாங்கி வரச்சொல்லி, உடன் இருந்த நண்பர்களை அனுப்பினார்.
வசூல்ராஜா தனியாக இருப்பதை அறிந்து, இரண்டு இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த ஐந்து பேர் கும்பல், கைவசம் இருந்த நாட்டு வெடிகுண்டை, அவர் மீது வீசியது.
இதில் பதற்றமடைந்து, நிலை தடுமாறி விழுந்த வசூல்ராஜாவின் முகம், உடலின் பல பாகங்களில் சரமாரியாக கத்தியால் வெட்டினர். படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து, அங்கேயே இறந்தார். மர்ம கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது.
தகவலறிந்த காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் மற்றும் காஞ்சி தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். தடயவியல் நிபுணர்கள், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
தனிப்படை
போலீசார் கூறியதாவது:
திருக்காலிமேடு வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், ஸ்கூட்டியில் வாலிபர் ஒருவர் செல்வதும், மற்றொரு வாலிபர் அதன் பின்னால் ஓடுவதும் மட்டும் தெரிந்தது. மற்றவர்கள் பற்றிய காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்ம கும்பலை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமீப ஆண்டுகளில், திருக்காலிமேடில் கொலை ஏதும் நடக்காமல் இருந்த நிலையில், மீண்டும் ஒரு கொலை பட்டப்பகலிலேயே நடந்ததால், அப்பகுதியில் வசிப்போர் அச்சமடைந்துள்ளனர்.