/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
ADDED : ஜூலை 13, 2024 09:51 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு 38; மாற்றுத்திறனாளி. நேற்று, பிரபு தன் மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர வாகனத்தில், அதே பகுதியைச் சேர்ந்த அசோகன், 60, என்பவரை பின்னால் அமர வைத்து கொண்டு, வாலாஜாபாத்- - ஒரகடம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வாலாஜாபாத் மின் அலுவலகம் அருகே சென்றபோது, ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த சுதர்சன், 29, என்பவர், இயக்கி வந்த, 'பல்சர்' இருசக்கர வாகனத்தோடு மாற்றுத்திறனாளி பிரபுவின் வாகனம் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அப்பகுதினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாற்றுத்திறனாளி பிரபு உயிரிழந்தார். விபத்து குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.