Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தேகளீச பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை

தேகளீச பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை

தேகளீச பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை

தேகளீச பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை

ADDED : செப் 21, 2025 05:00 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு திருப்பாவாடை தளிகை சிறப்பு வழிபாடு நடந்தது.

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை, 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளினார்.

காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11:00 மணிக்கு சிகப்பு கல்கி கிரீடம், மரகத கண்டி, மரகத பச்சை பதக்கம், அட்டிகை அணிந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது.

மதியம் 1:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க திருப்பாவாடை தளிகையுடன் தீபாராதனை நடந்தது.

மூலவர் உலகளந்த பெருமாள் கல்பதித்த சங்கு சக்கரம், கர்ண பத்திரம், காசு மாலை, மாங்காய் மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாலை 6:00 மணிக்கு பெருமாள் சன்னதி வீதி புறப்பாடு, கண்ணாடி அறையில் ஊஞ்சல் சேவை, இரவு 9:00 மணிக்கு சுவாமி மூலஸ்தானம் எழுந்தள்ளினார்.

ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில், வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us