Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பலத்த காயங்களுடன் கிடந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலி

பலத்த காயங்களுடன் கிடந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலி

பலத்த காயங்களுடன் கிடந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலி

பலத்த காயங்களுடன் கிடந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலி

ADDED : ஜன 25, 2024 11:50 PM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் பலத்த காயங்களுடன் கிடந்த விவசாயி இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்,53; இவர் கடந்த 21 ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 22 ம் தேதி காலை 8.45 மணியளவில் உலகங்காத்தான் கிராம நுழைவு வாயில் அருகே உள்ள பாலத்தின் கீழே உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

தகவலறிந்த அவரது மனைவி கொளஞ்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் செல்வராஜை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்கிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை 7.15 மணியளவில் இறந்தார்.

புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us