Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மகன் சாவில் சந்தேகம்; தந்தை போலீசில் புகார்

மகன் சாவில் சந்தேகம்; தந்தை போலீசில் புகார்

மகன் சாவில் சந்தேகம்; தந்தை போலீசில் புகார்

மகன் சாவில் சந்தேகம்; தந்தை போலீசில் புகார்

ADDED : செப் 05, 2025 07:39 AM


Google News
கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சி ஆற்றுமாமனந்தலைச் சேர்ந்தவர் அழகேசன் மகன் ரஞ்சித்குமார்,27; இவரை கடந்த 28ம் தேதி இரவு 7 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி மகன் கோவிந்தராஜ், மணி மகன் ஆறுமுகம் ஆகியோர் அழைத்து சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் ரஞ்சித்குமார் வீடு திரும்பாத நிலையில், 29ம் தேதி காலை 8 மணியளவில் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே சுய நினைவின்றி கழுத்து, முதுகில் அடிபட்டு கிடந்தார்.

தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் ரஞ்சித்குமாரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

இது தொடர்பாக ரஞ்சித்குமாரின் தந்தை அழகேசன் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us