Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நகை மதிப்பீட்டாளர் சடலமாக மீட்பு

நகை மதிப்பீட்டாளர் சடலமாக மீட்பு

நகை மதிப்பீட்டாளர் சடலமாக மீட்பு

நகை மதிப்பீட்டாளர் சடலமாக மீட்பு

ADDED : செப் 05, 2025 03:34 AM


Google News
உளுந்தூர்பேட்டை:தண்டவாளத்தில் நகை மதிப்பீட்டாளர் சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த நகர் ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை 4:00 மணியளவில், 40 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவர் பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தாலுகா லப்பக்குடி பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சுரேஷ், 41; கடலுார் மாவட்டம் வேப்பூரில் உள்ள கனரா வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தது தெரிய வந்தது.

ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us