/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவர் மர்ம மரணம் உறவினர்கள் மறியல் மாணவர் மர்ம மரணம் உறவினர்கள் மறியல்
மாணவர் மர்ம மரணம் உறவினர்கள் மறியல்
மாணவர் மர்ம மரணம் உறவினர்கள் மறியல்
மாணவர் மர்ம மரணம் உறவினர்கள் மறியல்
ADDED : ஜூன் 14, 2025 06:19 AM
திருக்கோவிலுார்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விக்னேஷ், 17; பிளஸ் 2 முடித்து விட்டு, மேல் படிப்பிற்கு விண்ணப்பித்து காத்திருந்தார்.
ஜூன் 11ம் தேதி இவரது பாட்டி குப்புவிற்கும், அவரது தங்கை அஞ்சலைக்கும் வீட்டு மனை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை விக்னேஷ், பாட்டி குப்புவிற்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில், நேற்று காலை காப்புக்காட்டில் பாறைகளுக்கு நடுவே உள்ள மரத்தில், விக்னேஷ் துாக்கில் சடலமாக மீட்கப்பட்டார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள், விக்னேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கூறி, அவரது உடலை வீரபாண்டி ஊராட்சி அலுவலகம் முன் திருக்கோவிலுார் - வேட்டவலம் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
அரகண்டநல்லுார் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி கலைத்தனர்.