Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

ADDED : ஜூன் 07, 2025 01:49 AM


Google News
கள்ளக்குறிச்சி : தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஜி.எஸ்.டி., வருமான வரி தொழில்நுட்ப பயிற்சி, தொழில் உற்பத்தி பயிற்சி, டிஜிட்டல் திறன்களில் ஐ.டி.இ.எஸ்., மற்றும் பி.பி.ஓ., பயிற்சி, இணைய தொழில் நுட்ப பயிற்சி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகளை வழங்குகிறது. இதில் சேர, 21-30 வயது வரை உள்ள, 2021-24ம் ஆண்டு வரை இளங்கலை அல்லது முதுகலை பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். தாட்கோ இணையதளான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us