Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

ADDED : ஜூன் 28, 2025 12:18 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி எதிரே வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பகுதி சாலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் சில வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடனேயே, சாலையை கடக்கும் சூழல் நிலவுகிறது.

இதையடுத்து, அந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதில் மாணவர்கள் மட்டுமின்றி, முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் பெரிய அளவிலான விபத்துகள் நடப்பதற்கு முன், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us