Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சங்கராபுரம் பகுதியில் குடியரசு தின விழா

சங்கராபுரம் பகுதியில் குடியரசு தின விழா

சங்கராபுரம் பகுதியில் குடியரசு தின விழா

சங்கராபுரம் பகுதியில் குடியரசு தின விழா

ADDED : ஜன 28, 2024 06:09 AM


Google News
சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், ஒன்றிய குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கி தேசியகொடியேற்றினார். ஒன்றிய குழு துணை தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ் ,பி.டி.ஒ.க்கள் ஐயப்பன்,ஜெய்கணேஷ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள்,ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

சங்கராபுரம் பேருராட்சியில் பேருராட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை தேசிய கொடி ஏற்றினார்.செயல் அலுவலர் சம்பத் குமார் வரவேற்றார்.

துணை தலைவர் ஆஷாபீ முன்னிலை வகித்தார். விழாவில் வார்டு கவுன்சிலர்கள்,பணியாளர்கள் பங்கேற்றனர்.

சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு பால்ராஜ் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி,குசேலன்,விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.பள்ளி தாளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். இன்னர்வீல் கிளப் தலைவி கவுரி விஜயகுமார் தேசியகொடி ஏற்றினார்.

சங்கராபுரம் டி.எம்.பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் ரோட்டரி தலைவர் நடராஜன் தேசிய கொடி ஏற்றினார்.

சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தேசிய கொடி ஏற்றினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us