ADDED : ஜூன் 14, 2025 01:07 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தை சேர்ந்த முனியன் மகள் தேன்மொழி,23; இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல, குடும்பத்தினருடன் துாங்கினார். அதிகாலை வீட்டில் உள்ளவர்கள் கண் விழித்து பார்த்த போது, அவரை காணவில்லை.
பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.