ADDED : மே 24, 2025 12:09 AM
சங்கராபுரம்,: சங்கராபுரம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் மரியதாஸ் மகன் ஆரோக்யசாமி, 50;இவரது மகள் மேக்வின் ரோசி, 19; இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கடந்த வாரம் வீட்டிற்கு வந்தவர், நேற்று முன்தினம் சென்னை செல்வதாக கூறி, வீட்டை விட்டு கிளம்பியவர் அங்கு செல்லவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.