Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பள்ளி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

பள்ளி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

பள்ளி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

பள்ளி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

ADDED : மே 21, 2025 11:49 PM


Google News
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே மாயமான பள்ளி மாணவியை, போலீசார் தேடி வருகின்றனர்.

வரஞ்சரம் அடுத்த விருகாவூரை சேர்ந்தவர் மாதவன் மகள் சரண்யா,16; இவர், கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார்.

கோடை விடுமுறையில் கள்ளக்குறிச்சியில் தையல் வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். கடந்த 19ம் தேதி காலை 8:00 மணிக்கு, வழக்கம்போல தையல் வகுப்புக்கு புறப்பட்டு சென்றவர், மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

அச்சமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது தாய் செல்வி, வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us