Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலி

ADDED : மே 21, 2025 11:50 PM


Google News
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதிய விபத்தில் ஜே.சி.பி., டிரைவர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பெரிய தம்பி மகன் சதீஷ்குமார்,40; ஜே.சி.பி., டிரைவர்.

இவர் கடந்த, 20 ம் தேதி இரவு 9:30 மணிக்கு தனது பைக்கில், எலவனாசூர் கோட்டையில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரம் எச்சரிக்கை விளக்கு எரியாமல் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us