Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முதியவர் சடலம் போலீஸ் விசாரணை

முதியவர் சடலம் போலீஸ் விசாரணை

முதியவர் சடலம் போலீஸ் விசாரணை

முதியவர் சடலம் போலீஸ் விசாரணை

ADDED : மே 15, 2025 11:59 PM


Google News
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே, ஆட்டுக்கொட்டகையில் துாக்கிட்டு முதியவர் சடலமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கச்சிராயபாளையம் அடுத்த மட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம், 74; விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வந்ததால், தினமும் இரவு நேரங்களில் கொட்டகையில் உறங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு ஆட்டு கொட்டகைக்கு உறங்கச் சென்றார். நேற்று காலை 8:30 மணிக்கு,

புடவையில் தூக்கிட்டு ஆட்டு கொட்டகையில் சடலமாக கிடந்தார்.

கச்சிராயபாளையம் போலீசார் முதியவரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us