ADDED : மே 15, 2025 11:59 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் தினேஷ்குமார், காது, மூக்கு, தொண்டை டாக்டர் கணேஷ்ராஜா, மனநல டாக்டர் காயத்ரி, கண் டாக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 82 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் 72 பேருக்கு, தேசிய அடையாள அட்டைகளை வழங்கினர்.