ADDED : செப் 10, 2025 08:48 AM

சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.,பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் இளையராஜா வரவேற்றார்.
மாவட்ட தொடர்பு அலுவலர் முருகேசன் முகாமை துவக்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.