Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

ADDED : செப் 21, 2025 11:10 PM


Google News
கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளிகள் மருத்துவ முகாமில் 91 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமுடன் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்.

அரசு எலும்பு முறிவு டாக்டர் கமலசேகரன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மனோஜ், மனநல டாக்டர் சரஸ்வதி, கண் டாக்டர் கிருத்திகா உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 118 மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்தனர்.

அதில் தகுதி வாய்ந்த, 91 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 25 மாற்றுத் திறனாளிகள் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 67 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வேண்டி பதிவேற்றம் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us