/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆடுகள் திருடிய 3 வாலிபர்கள் கைது ஆடுகள் திருடிய 3 வாலிபர்கள் கைது
ADDED : செப் 21, 2025 11:10 PM
சின்னசேலம்: சின்னசேலம் பகுதியில் ஆடுகள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம், போயர் தெருவைச் சேர்ந்தவர் பொண்ணன் மகன் கேசவன், 65; இவர் 9 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு கேசவன் வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது கேசவனின் 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சின்னசேலம் பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் பரணி, 19; பாண்டியங்குப்பம் குருநாதன் மகன் குருமூர்த்தி, 19; ரவி மகன் முகிலன், 17; ஆகியோர் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.