Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது

ADDED : மே 16, 2025 02:38 AM


Google News
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரம், புனித மைக்கேல் அதிதுாதர் ஆலயத்தில் நேற்று தேர் திருவிழா நடந்தது.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் மகன் ஜான் பேப் டிஸ்ட், 35; என்பவர் தேருக்கு முன், நண்பர்களுடன் ஆடிக் கொண்டிருந்தார். மேலும் அவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சண்முகத்தை, திட்டி அவரை பணி செய்ய விடாமல் தடுத்தார். தொடர்ந்து, வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us