/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கனியாமூர் மாணவி வழக்கு ஒத்திவைப்பு கனியாமூர் மாணவி வழக்கு ஒத்திவைப்பு
கனியாமூர் மாணவி வழக்கு ஒத்திவைப்பு
கனியாமூர் மாணவி வழக்கு ஒத்திவைப்பு
கனியாமூர் மாணவி வழக்கு ஒத்திவைப்பு
ADDED : மார் 21, 2025 03:13 AM
கள்ளக்குறிச்சி,:கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி இறந்த வழக்கின் விசாரணை வரும் ஏப்.,23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர், சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த, 2022ம் ஆண்டு ஜூலை, 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் தாய் செல்வி புகாரின் பேரில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகா கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இருந்து ஆசிரியர்கள் கீர்த்திகா, ஹரிப்பிரியா நீக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்வி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் தேவச்சந்திரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், விசாரணையை வரும் ஏப்., 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.