Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மனைவிக்கு சரமாரி வெட்டு சின்னசேலம் அருகே கணவர் கைது

மனைவிக்கு சரமாரி வெட்டு சின்னசேலம் அருகே கணவர் கைது

மனைவிக்கு சரமாரி வெட்டு சின்னசேலம் அருகே கணவர் கைது

மனைவிக்கு சரமாரி வெட்டு சின்னசேலம் அருகே கணவர் கைது

ADDED : ஜன 07, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மனைவியை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்

சின்னசேலம் அடுத்த கீழ்நாரியப்பனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; இவரது மனைவி புஷ்பா, 25; இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 பிள்ளைகள் உள்ளனர்.

தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

நேற்று மதியம் 12:00 மணியளவில் எஸ்.ஒகையூர் - சிறுமங்கலம் சாலை வழியாக புஷ்பா நடந்து சென்றார்.

அப்போது பைக்கில் வந்த மணிகண்டன், புஷ்பாவை வழிமறித்து திட்டி, கொடுவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில், படுகாயமடைந்த புஷ்பா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார், வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us