ADDED : பிப் 11, 2024 03:27 AM

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே குட்கா கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் நேற்று மதியம் மணம்பூண்டி நான்கு முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பைக்கில் மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து சோனை செய்தனர். அதில், 156 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், அரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மன்னுநாதன் மகன் இளங்கோவன், 34; எனவும், திருக்கோவிலுாரில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக திருவண்ணாமலையில் இருந்து குட்காவை கடத்தி வந்ததாகவும் தெரிவித்தார். இதன் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய் ஆகும்.
அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து பைக் மற்றும் 156 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, இளங்கோவனை சிறையில் அடைத்தனர்.