Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குட்கா விற்பனை : ஒருவர் கைது

குட்கா விற்பனை : ஒருவர் கைது

குட்கா விற்பனை : ஒருவர் கைது

குட்கா விற்பனை : ஒருவர் கைது

ADDED : மே 24, 2025 11:55 PM


Google News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஆவியூர், கடலுார் பிரதான சாலை பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள், 300 பாக்கெட்டுகளில், குட்கா இருந்தது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து கடையின் உரிமையாளர் செல்வம், 55; கைது செய்யப்பட்டார். புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us