/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாவட்ட சிறார் நீதிமன்றம் திறப்பு மாவட்ட சிறார் நீதிமன்றம் திறப்பு
ADDED : செப் 11, 2025 11:03 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் மாவட்ட சிறார் நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த விழாவிற்கு, மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை தாங்கி நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயவேல், நீதித்துறை நடுவர்-2 ரீனா, கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சேகர், செயலாளர் பழனிவேல் உட்பட வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.