ADDED : ஜன 02, 2024 11:46 PM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே வீட்டில் துாங்கி கொண்டிருந்த சிறுமி மாயமானது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டையை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகள் அர்ச்சனா, 15; இவர் உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 1ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார்.
உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து அர்ச்சனாவின் தாய் ரேணுகா புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து அர்ச்சனாவை தேடி வருகின்றனர்.