ADDED : செப் 10, 2025 08:47 AM
கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் கட்டிமுத்து மகன் சந்திரசேகர், 35; இவர் கடந்த 7ம் தேதி இரவு தனது வீட்டிற்கு முன் ஹிரோ ஸ்பிளெண்டர் பைக்கை நிறுத்தி சென்றார். சில மணி நேரங்களுக்கு பிறகு திரும்பியபோது, பைக் மாயமாகி இருந்தது. திருடு போன பைக்கினை கண்டுபிடித்து தரக்கோரி சந்திரசேகர் போலீசில் புகார் அளித்தார்.
வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.