ADDED : பிப் 09, 2024 11:11 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, சித்தேரி தெருவைச் சேர்ந்தவர் உதயசூரியன் மகன் தமிழ்ச்செல்வன், 32; இவர் நேற்று காலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.