ADDED : மே 27, 2025 12:13 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கச்சிராயபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, இந்திரா நகரைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் வீரமணி, 33; என்பவர் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.
மேலும், விளாந்தாங்கல் ரோடு பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் அறிவுக்கரசு, 33; என்பவர் மதுபாட்டில் விற்பனைக்கு உதவி செய்ததும் தெரிந்தது.
இதையடுத்து வீரமணி, அறிவுக்கரசு ஆகிய 2 பேரையும் கைது செய்து, 2 பிராந்தி பாட்டில்கள், சூப்பர் ஸ்பிளண்டர் பைக் மற்றும் 2,400 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.