Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/இரு வீடுகளில் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, பணம் திருட்டு இரு வீடுகளில் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, பணம் திருட்டு

இரு வீடுகளில் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, பணம் திருட்டு இரு வீடுகளில் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, பணம் திருட்டு

இரு வீடுகளில் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, பணம் திருட்டு இரு வீடுகளில் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, பணம் திருட்டு

இரு வீடுகளில் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, பணம் திருட்டு இரு வீடுகளில் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, பணம் திருட்டு

ADDED : ஜன 31, 2024 07:32 AM


Google News
Latest Tamil News
உளுந்துார்பேட்டை,: உளுந்துார்பேட்டையில் அடுத்தடுத்த இரு வீடுகளின் பூட்டை உடைத்து 13 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

உளுந்துார்பேட்டை மாடல் காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார்,32; உளுந்துார்பேட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக் கொண்டு மனைவியுடன் விக்கிரவாண்டிக்கு சென்று இருந்தார்.

நேற்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்த கிடந்தது. அதில் வைத்திருந்த 11 சவரன் நகை, ரூ. 5 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. இதேபோல், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த தமிழ்வேந்தன், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 2 சவரன் நகையை திருடு போயிருந்தது.

தகவலறிந்த உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை,

ஜன. 31-

உளுந்துார்பேட்டை மாடல் காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார்,32; இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக் கொண்டு மனைவியுடன் விக்கிரவாண்டிக்கு சென்று இருந்தார்.

நேற்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்த கிடந்தது. அதில் வைத்திருந்த 11 சவரன் நகை, ரூ. 5 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. இதேபோல், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த தமிழ்வேந்தன், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 2 சவரன் நகையை திருடு போயிருந்தது.

உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us