Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

ADDED : ஜூலை 12, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட குடும்ப நல செயலகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்துறை சார்பில் பொதுமக்களுக்கு மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு பேரணி நேற்று நடந்தது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த பள்ளி மாணவர்களின் பேரணி மற்றும் விழிப்புணர்வு ரதத்தினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நகரின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

இதில் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார், குடும்பநலத்துறை துணை இயக்குனர் ஹிலாரினா ஜோசிட்டா நளினி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us