Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பா.ஜ., மாநில தலைவர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்., கட்சியினரால் பரபரப்பு

பா.ஜ., மாநில தலைவர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்., கட்சியினரால் பரபரப்பு

பா.ஜ., மாநில தலைவர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்., கட்சியினரால் பரபரப்பு

பா.ஜ., மாநில தலைவர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்., கட்சியினரால் பரபரப்பு

ADDED : ஜூலை 12, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் மாநில தலைவர் செல்வபெருந்தகை குறித்து அவதுாறாக பேசிய பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டித்து நேற்று நடந்தை ஆர்ப்பாட்டத்தில் அவரது உருபொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.

நகர கவுன்சிலர் தேவராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, இதயத்துல்லா, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், கலைபிரிவுத் தலைவர் கலியமூர்த்தி, இளைஞர் காங்., மாவட்டத் தலைவர் மாதேஷ்வரன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார்.

முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர். இதில் நிர்வாகிகள் பவுணாம்பாள், ராஜேஸ்வரி, மதுராதேவி, பெரியசாமி, சுரேஷ், கிருபானந்தம், கொளஞ்சியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது திடீரென பா.ஜ., தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவ பொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் காங்., கட்சியினருக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us