Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பருத்தி மருந்து குடித்தவர் பலி

பருத்தி மருந்து குடித்தவர் பலி

பருத்தி மருந்து குடித்தவர் பலி

பருத்தி மருந்து குடித்தவர் பலி

ADDED : ஜூலை 12, 2024 06:36 AM


Google News
கள்ளக்குறிச்சி: பருத்தி மருந்தினை குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தலை சேர்ந்தவர் வடிவேல் மகன் சந்திரன்,45; இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 4ம் தேதி சந்திரனுக்கு வழக்கம்போல் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாததால் சந்திரன் பருத்தி மருந்தினை குடித்துள்ளார். தகவலறிந்த அவரது குடும்பத்தினர் சந்திரனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us