Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இரண்டு மாதமாக குடிநீர் விநியோகம் 'கட்' காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்

இரண்டு மாதமாக குடிநீர் விநியோகம் 'கட்' காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்

இரண்டு மாதமாக குடிநீர் விநியோகம் 'கட்' காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்

இரண்டு மாதமாக குடிநீர் விநியோகம் 'கட்' காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்

ADDED : ஜூலை 12, 2024 06:36 AM


Google News
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே குடிநீர் பிரச்னையால் காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் இருந்து வந்தது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அதிருப்தியடைந்த கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளின் கண்டித்து நேற்று காலை 7.30 மணியவில் 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் உளுந்துார்பேட்டை- திருவெண்ணைநல்லுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பாண்டூர் ஊராட்சித் தலைவர் சித்ராராஜேந்திரன் மற்றும் உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு மறியலில் ஈடுபட்டவர்களுடன் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தனர்.

அதன் பேரில் 7.30 மணியளவில் சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us