Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பொக்லைன் இயந்திரம் மூலம் தாய் மாமன் சீர் வரிசை

பொக்லைன் இயந்திரம் மூலம் தாய் மாமன் சீர் வரிசை

பொக்லைன் இயந்திரம் மூலம் தாய் மாமன் சீர் வரிசை

பொக்லைன் இயந்திரம் மூலம் தாய் மாமன் சீர் வரிசை

ADDED : ஜூலை 09, 2024 08:33 PM


Google News
Latest Tamil News
சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே மஞ்சள் நீராட்டு விழாவுக்கு, தாய்மாமன் சீராக 20 அடி உயரம் 40 கிலோ எடை கொண்ட ரோஜா மாலையை, பொக்லைன் இயந்திரம் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பு. இவரது மகள் சுபஸ்ரீயின் மஞ்சள் நீராட்டு விழா நேற்று முன் தினம் நடந்தது.

விழாவை அசத்தலாக நடத்த முடிவு செய்த சுபஸ்ரீயின் தாய் மாமன்கள் ஐந்து பேர், 20 அடி உயரம் 40 கிலோ எடை கொண்ட ரோஜா மாலை மற்றும் 224 சீர் வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர்.

கேரள செண்டை மேளம் முழுங்க, ஆடல் பாடலுடன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, பிரமாண்ட ரோஜா மாலையை பொக்லைன் இயந்திரம் வாயிலாக சுபஸ்ரீக்கு அணிவித்து சீர் செய்தனர்.

இது, அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us