/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் அடித்து கொலை மையத்திற்கு சீல்: உரிமையாளருடன் 6 பேர் கைது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் அடித்து கொலை மையத்திற்கு சீல்: உரிமையாளருடன் 6 பேர் கைது
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் அடித்து கொலை மையத்திற்கு சீல்: உரிமையாளருடன் 6 பேர் கைது
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் அடித்து கொலை மையத்திற்கு சீல்: உரிமையாளருடன் 6 பேர் கைது
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் அடித்து கொலை மையத்திற்கு சீல்: உரிமையாளருடன் 6 பேர் கைது
ADDED : ஜூலை 09, 2024 07:24 PM

திருக்கோவிலுார்:கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த குச்சிப்பாளையம், அய்யப்பன் நகரில், லோட்டஸ் பவுண்டேஷன் சார்பில், குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் காமராஜ், 54.
ஜா.சித்தாமூரை சேர்ந்த பொன்முடி மகன் ராஜசேகர், 38. கடந்த, 5ம் தேதி முதல் இங்கு சிகிச்சையில் இருந்து வந்தார். மேலும், 25 பேர் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
கடந்த 8ம் தேதி அதிகாலை உடல்நிலை சரியில்லை எனக்கூறி ராஜசேகரை மறுவாழ்வு மைய ஊழியர்கள் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த மணலுார்பேட்டை போலீசார் ராஜசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜசேகர் மனைவி ராஜாமணி கொடுத்த புகாரில் சந்தேக மரணம் பிரிவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், ராஜசேகரின் உடலில் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திருக்கோவிலுார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கடுமையாக தாக்கப்பட்டதால் ராஜசேகர் உயிரிழந்தது தெரிய வந்தது. மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் திருக்கோவிலுாரை சேர்ந்த காமராஜ், 54, சிகிச்சை பெற்று வந்த சந்தைப்பேட்டையை சேர்ந்த ஜமால், 30, உள்ளிட்ட ஆறு பேர் மீது கொலை வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த, 23 பேரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசார் முன்னிலையில், குலதீபமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் மறுவாழ்வு மையத்தை பூட்டி 'சீல்' வைத்தார்.