Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

ADDED : ஜூலை 21, 2024 07:53 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: மேலுாரில் கிணற்றில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் கிராமத்தில் அர்ஜூனன் என்பவரது விளைநில கிணற்றில் புள்ளி மான் விழுந்ததாக தீயணைப்பு துறையினருக்கு நேற்று காலை 10:00 மணியளவில் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சக்திவேல் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்த 2 வயது ஆண் மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறை அலுவலர் செல்வசேகரன் புள்ளி மானை சிகிச்சைக்காக இந்திலி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை முடிந்ததும், வாணவரெட்டி காப்புக்காட்டில் மான் விடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us