ADDED : ஜூன் 16, 2024 10:24 PM
ரிஷிவந்தியம் : பகண்டை கூட்ரோட்டில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பழனி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி நகரில் உள்ள மா.கம்யூ., அலுவலகத்தில் சூறையாடிய கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.