/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : ஜூலை 20, 2024 06:00 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்ட தீர்மானத்தில் கள்ளச்சாராயத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்காததை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 5 பேர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டம் நேற்று மதியம் 12:00 மணியளவில் நடந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த நகர மன்ற தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் பாண்டு, துப்புரவு ஆய்வாளர் சையத்காதர், நகரமைப்பு ஆய்வாளர் அமலின் சுகுணா, வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நகராட்சி 11வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் பாபு, கூட்ட தீர்மான நகலில் கள்ளக்குறிச்சியில் இறந்த 67 பேருக்கு இரங்கல் தீர்மானம் பற்றி குறிப்பிடவில்லை. இதனை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நாங்கள் 5 பேரும் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறுகிறோம்' என்றார்.அதற்கு பதில் அளித்து பேசிய நகர மன்ற தலைவர் சுப்ராயலு, 'பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராய சாவு உங்கள் ஆட்சிக்காலத்தில்தானே நடந்தது' என்றார்.
இதற்கு பதில் கவுன்சிலர் பாபு, எங்கள் ஆட்சியில் இதுபோன்ற மரண சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் மக்கள்தான். தலித் மக்கள் மீது உங்களுக்கு அக்கரை இல்லை. பாரபட்சமாக செயல்படுவதால்தான் நகர்மன்ற கூட்ட தீர்மானத்தில் ஒருவர் கூட 67 பேர் இறப்புக்கு இரங்கல் தீர்மானம் குறித்து எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றபடி வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சத்யா, சங்கீதா உட்பட 5 கவுன்சிலர்கள் வெளியேறினர். மற்ற உறுப்பினர்களுடன் நகர மன்ற கூட்டம் தொடர்ந்தது.