Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கணவர் மாயம்- மனைவி புகார்

கணவர் மாயம்- மனைவி புகார்

கணவர் மாயம்- மனைவி புகார்

கணவர் மாயம்- மனைவி புகார்

ADDED : ஜூலை 30, 2024 11:19 PM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி, கீழ்குப்பம் அடுத்த தோட்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், 60. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுகாரருக்கும் நிலம் தொடர்பான பிரச்னை உள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக சந்திரசேகர் மனஉளைச்சலில் இருந்தார். கடந்த 28ம் தேதி இரவு சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கம்போல் துாங்க சென்றனர். மறுநாள் காலை அவரது மனைவி சாந்தி எழுந்து பார்த்தபோது, சந்திரசேகர் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, சந்திரசேகரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us