ADDED : ஜூன் 16, 2024 06:49 AM

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி கிளப் தலைவர் வாசன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
கோவை சங்கரா கண் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 150 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 48 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.