ADDED : ஜூன் 10, 2024 01:03 AM
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் இருந்த 1,050 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன்மலை பகுதி கிராமங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, புதுார் கிராமத்தில் பேரல்களில் சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் இருந்தது தெரிந்தது.
தொடர்ந்து, பேரல்களில் இருந்த 1,050 லிட்டர் சாராய ஊறலை அங்கேயே கொட்டி அழித்தனர். மேலும், அங்கிருந்த 90 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புதுார் கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.