Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அனுமதியின்றி மண் ஏற்றிய டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்

அனுமதியின்றி மண் ஏற்றிய டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்

அனுமதியின்றி மண் ஏற்றிய டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்

அனுமதியின்றி மண் ஏற்றிய டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்

ADDED : ஜூன் 08, 2024 04:16 AM


Google News
கள்ளக்குறிச்சி : ஈரியூரில் ஓடை பாறையில் மண் எடுத்த டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கீழ்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். ஈரியூர் பொன்னையா கோவில் ஓடை அருகே, இரண்டு பேர் அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் ஓடை பாறை மண் ஏற்றியது தெரிந்தது.

போலீசாரை பார்த்ததும் மண் அள்ளும் பணியில் ஈடுபட்ட இருவரும் தப்பியோடினர். தொடர்ந்து, 3 யூனிட் மண்ணுடன் இருந்த டிப்பர் லாரி (டி.என் 47 ஏ ஒய் 1379), பதிவெண் இல்லாத பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

தப்பி ஓடிய வேப்பூரை சேர்ந்த முத்துகண்ணு மகன் பெரியசாமி, குரூரை சேர்ந்த ஏழுமலை மகன் சுரேஷ் ஆகியோர் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us