Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பல்லகச்சேரி ஏரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை

பல்லகச்சேரி ஏரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை

பல்லகச்சேரி ஏரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை

பல்லகச்சேரி ஏரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை

ADDED : ஜூன் 16, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி ஏரியில் தீயணைப்புத்துறை சார்பில் நடந்த பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிக்கு, ரிஷிவந்தியம் தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) கமலஹாசன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில், மழைக்காலங்களில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் முழுதுமாக தண்ணீர் நிரம்பி இருக்கும். அப்போது, நீர்நிலைகளில் ஆழமான இடங்களில் சிக்கி தவிப்பவர்களை லாரி டியூப், கேன் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பத்திரமாக மீட்கும் முறை, உடனடியாக முதலுதவி அளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செயல்முறை பயிற்சி மூலம் செய்து காண்பித்தனர்.

மேலும், பொதுமக்கள் கேட்ட சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் முருகன், அருள்செல்வன், முனுசாமி, குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us