Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சொத்தை மீட்டு தரக்கோரி மாற்றுத்திறனாளி தர்ணா

சொத்தை மீட்டு தரக்கோரி மாற்றுத்திறனாளி தர்ணா

சொத்தை மீட்டு தரக்கோரி மாற்றுத்திறனாளி தர்ணா

சொத்தை மீட்டு தரக்கோரி மாற்றுத்திறனாளி தர்ணா

ADDED : ஜூலை 30, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், ஆக்கிரமிப்பில் உள்ள சொத்தினை மீட்டுத்தரக்கோரி பார்வையற்ற மாற்றுத் திறனாளி தர்ணாவில் ஈடுபட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாவந்துாரைச் சேர்ந்த சேவி மகன் ராஜமாணிக்கம், 53; பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர், நேற்று மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர் திடீரென அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார், அவரிடம் மனு அளிக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

அவர் அளித்த மனு:

எனக்கு சொந்தமாக பாவந்துார் கிராம எல்லையில் 17 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடம் தொடர்பாக எங்கள் பகுதியை சேர்ந்த 8 பேருக்கும் பிரச்னை உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அந்த இடத்தில் 8 பேரும் அத்துமீறி நுழைந்து கொட்டகை அமைத்து ஆக்கிரமித்து, போலியாக பட்டா பெற்றுள்ளனர். இது குறித்து கேட்ட என்னை திட்டி, மிரட்டுகின்றனர். எனவே உரிய விசாரணை நடத்தி, சொத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us