/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சங்கராபுரத்தில் போக்குவரத்து போலீசார் நியமிக்க கோரிக்கை சங்கராபுரத்தில் போக்குவரத்து போலீசார் நியமிக்க கோரிக்கை
சங்கராபுரத்தில் போக்குவரத்து போலீசார் நியமிக்க கோரிக்கை
சங்கராபுரத்தில் போக்குவரத்து போலீசார் நியமிக்க கோரிக்கை
சங்கராபுரத்தில் போக்குவரத்து போலீசார் நியமிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 24, 2024 05:39 AM
சங்கராபுரம், : சங்கராபுரத்திற்கு போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படாததால், நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சங்கராபுரம் பகுதி வேகமாக வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தினசரி சங்கராபுரம் வந்து செல்கின்றனர்.
அவர்கள் தங்களின் இரு சக்கர வாகனத்தை கடையின் முன் தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர்.இதனால் காலை, மாலை வேளைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் போக்குவரத்து பாதிக்கிறது.
மேலும், சரக்கு வாகன லாரிகள் கடைகளில் முன்பு சரக்கு இறக்குவதற்காக நிறுத்தப்படுவதாலும், போக்குவரத்து பாதித்து வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சங்கராபுரத்தில் போக்குவரத்தை சீரமைக்க இதுவரை போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி., சங்கராபுரத்திற்கென தனியாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.